tamilnadu

img

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், பிப். 12- பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள அறையினை  மாவட்டத் தேர்தல் அலுவ லர்/ மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தி லுள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடு மலைப்பேட்டை மற்றும் மடத்துக்கு ளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி. பேட் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங் கள் அனைத்தும் திருப்பூர் தெற்கு வட் டாட்சியர் அலுவலகம் மற்றும் பல்ல டம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் சீலிடப்பட்டு பாதுகாப்பு அறையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலருடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதனன்று பல்லடம் வட்டாட்சியர் அலு வலகத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையினையும் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுவதையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மேலும், வட்டாட்சியர் அலுவல கத்தில் செயல்படும் அரசு பொது இ. சேவை மையத்தினை மாவட்ட ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களி டம் குறைகளை கேட்டறிந்தார்.