தருமபுரி, நவ.20- தருமபுரி மாவட்டத்தில் முதலமைச் சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் 4,031 பயனாளிகளுக்கு ரூ.39 கோடியே 81 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய தாவது, முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் தருமபுரி வட்டத்தில் 1,551 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 55 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலும், நல்லம் பள்ளி வட்டத்தில் 1,192 பயனாளிகளுக்கு ரூ.15 கோடியே 59 லட்சம் மதிப்பிலும், பென்னாகரம் வட்டத்தில் 1,288 பயனாளி களுக்கு ரூ.11 கோடியே 67 லட்சம் மதிப்பில் என மொத்தம் 4,031 பயனாளிகளுக்கு ரூ.39 கோடியே 81 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது என தெரிவித்தார். முன்னதாக,இவ்விழாவில் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், வரு வாய் கோட்டாட்சியர் (பொ) தேன்மொழி, தனித்துணை ஆட்சியர் வெங்கட்ராமன், வட்டாட்சியர்கள் சுகுமார், சௌகத்அலி, சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், அருள்மொழிதேவன், ஆனந்தன், ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.