திருப்பூர், அக். 31 – பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கு 10 மாத நிலுவை ஊதி யத் தொகையை வழங்கக் கோரி வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பிஎஸ்என்எல் மெயின் தொலை பேசி நிலையம் முன்பாக நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளை தலைவர் வாலீசன் தலைமை வகித் தார். இதில் கோரிக்கையை வலி யுறுத்தி மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் முகமது ஜாபர், மாநில சங்க நிர்வாகி சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தோர் பெருந்திரளாகக் கலந்து கொண்ட னர்.
சுஜித்துக்கு அஞ்சலி
இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத் தின் முடிவில் ஆழ்துளைக் கிணற் றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சன் மறைவுக்கு இரங்கல் தெரி விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவன் சுஜித் படம் வைக்கப்பட்டு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.