தாராபுரம், ஆக. 16 - உடுமலை அமராவதி அணையில் திறந்துவிடப்பட்டதண்ணீர் தாராபுரத்தை வந்தடைந்தது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்தது. அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியான மறையூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் 76 அடி வரை உயர்ந்தது. அணைக்கு சராசரியாக ஆயிரம் கன அடி வீதம் நீர்வரத்து இருந்த தையடுத்து கரூர், திருப்பூர் மாவட்ட பொது மக்களின் குடிநீர் தேவைக்காக அணையி லிருந்து 2 ஆயிரம் கன அடி வீதம் 3 நாட்க ளுக்கும், ஆயிரம் கனஅடி வீதம் 2 நாட்க ளுக்கு ஆற்றில் தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டார். முதல்வர் உத் தரவையடுத்து அணையிலிருந்து திறக்கப் பட்ட தண்ணீர் வெள்ளியன்று அதிகாலை 4 மணியளவில் தாராபுரம் அமராவதி புதிய பைபாஸ் பகுதிக்கு வந்து சேர்ந்தது. வறண்டு கிடந்த அமராவதி ஆற்றில் தண்ணீர் வந்ததை பார்க்க ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் கூடினர்.