tamilnadu

img

சாலையை செப்பனிட சிபிஎம் வலியுறுத்தல்

சேலம்,  நவ.22- சேலம் மாநகராட்சி 26ஆவது வார்டில்  குண்டும், குழியுமான சாலையை செப்பனிட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  சேலம் மாநகராட்சி 26ஆவது வார்டிற் குட்பட்ட சின்னேரிவயல்காடு பகுதியில் உள்ள நேதாஜி தெரு மற்றும் பகத்சிங் தெரு  ஆகியவற்றில் கடந்த ஒரு ஆண்டாக பாதாள  சாக்கடை பணிகளுக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் சாலை  குண்டும், குழியுமாகி வருகின்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட் டோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இச் சாலையை செப்பனிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். இந்த கையெழுத்து படிவத்துடன் புகார் மனுவாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையை செப்பனிடும் பணிக்காக ஜல்லி கற்கள் கொட்டி உள் ளனர். ஆனால் செப்பனிடும் பணி தொட ராமல் கிடப்பில் போட்டனர்.  இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரு தெருக்களில் உள்ள  சாலையை தார்ச்சாலையாக மாற்ற  வேண்டுமென வலியுறுத்தி வெள்ளியன்று  சாலை மறியல் போராட்டம் நடை பெறும் என அறிவித்தனர். இந்நிலை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  தலைமையில் அப்பகுதி பொதுமக்கள்   புதிய பேருந்து நிலையம் மெய்யனூர்  பிரதான சாலையில் மறியல் போராட்டத் திற்கு ஆயத்தமானார்கள். இத்தகவலறிந்த  மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை யினர் நேரில் வந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் ஆகி யோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வாரத்தில் தார்ச்சாலை அமைப்ப தாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி  அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கலைந்து சென் றனர்.   இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், மாநகர குழு உறுப்பினர் ஆர்.வி.கதிர்வேல், சின்னேரிவயல்காடு  கிளை செயலாளர்கள் டி.ஞானவேல், எம். மேகராஜ், ஆர்.ரம்யா, வாலிபர் சங்க மாநகர  தலைவர் பி.சதீஷ்குமார், துணை செய லாளர் கே.ராமச்சந்திரன் உள்ளிட்ட திர ளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.