tamilnadu

img

புத்தக வாசிப்பு மனிதனின் அறிவை- கற்பனையை விரிவு செய்யும்!

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் பேச்சு 

ஈரோடு, அக்.18- புத்தக வாசிப்பு மனிதனின் அறிவை, கற்பனையை விரிவு செய்யும் என புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் 8  ஆவது ஆண்டாக புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் ஒருபகுதியாக வியாழனன்று மாலை நடைபெற்ற கருத்தரங்கில் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் பங்கேற்று பேசினார்.  அப்போது அவர் பேசுகையில், பெரிய நகரங்க ளுக்கு இணையாக புன்செய் புளியம்பட்டியில் 8 ஆவது புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா தொடர்ந்து நடப்பது மகிழ்ச்சிக்குரியது. புத்தகம் மனிதனின் அறிவை விசாலமாக்கும். புத்தக வாசிப்பு மனிதனின் கற்பனையை வளர்க்கும். மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்பது மிருகங்கள் கற்பனை செய்வ தில்லை என்பதே. மனிதன் மட்டுமே கற்பனை செய்கி றான். கற்பனையால் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைத் துள்ளான். ஆகவே, புத்தக வாசிப்பு மனிதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்.ஒரு நாட்டில் சிறைச் சாலைகள் குறைய வேண்டும். நூலகங்கள் பெருக வேண்டும். எனவே அனைத்து தரப்பினரும் இந்த புத்தக திருவிழாவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்நிகழ்விற்கு புன்செய் புளியம்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ், பொருளாளர் செவ் வந்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். இதில் வெற்றி நர்சிங் கல்லூரி இயக்குனர் ஸ்ரீதர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் உள்ள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.