அவிநாசி, ஜூலை 27- அவிநாசி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் சனியன்று ஈடுபட்டனர். அவிநாசி புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறத்தில் பல வருடங்களாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. தற்போது அந்த டாஸ்மாக் கடை புதிய பேருந்து நிலை யத்திற்கு எதிரே உள்ள தனியார் பல்பொருள் அங்காடிக்கு பின்புறத்தில் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைந் தால் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் என கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர், அந்த இடத்தில் டாஸ் மாக் கடை அமைக்கப்படாது என உறுதி அளித்தார். ஆனால் ஆட்சியரின் உறுதிமொழிக்கு மாறாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. மேலும் வெள்ளியன்று மின் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்றது. இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பழ.சண்முகம் மற்றும் பொதுமக்கள் புதிய டாஸ்மாக் கடையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த வட்டாட்சியர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள் கைபேசி மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு, தங்கள் கோரிக்கையை துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசப்பட்டு வருகிறது. எனவே ஒத்துழைப்பு தருமாறு கேட்டார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென் றனர்.