tamilnadu

img

கேரள எஸ்எஸ்எல்சி: 98.11 சதவிகிதம் தேர்ச்சி

திருவனந்தபுரம், மே 6-கேரள மாநில எஸ்எஸ்எல்சி தேர்வுமுடிவுகள் திங்களன்று (மே.6) வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியதில் 98.11 சதவிகிதம் மாணவ மாணவியர் தேர்வு பெற்றுள்ளதாக கல்வித்துறை செயலாளர் தெரிவித்தார். உயர்ந்த தேர்ச்சி விகிதத்தை பத்தனம்திட்டை மாவட்டமும், குறைவான தேர்ச்சியை வயநாடு மாவட்டமும் பெற்றுள்ளன.37,334 மாணாக்கர் அனைத்து பாடங்களிலும் ஏ-பிளஸ் பெற்றுள்ளனர். மிக அதிக அளவில் முழு ஏ-பிளஸ்மலப்புறம் மாவட்டம் பெற்றுள்ளது. மலப்புறத்தில் தேர்வு எழுதிய 2493 மாணவ மாணவியர் அனைத்து பாடங்களிலும் ஏ-பிளஸ் பெற்றுள்ளனர். 99.9 சதவிகிதம் வெற்றி பெற்ற குட்டநாடு, கல்வி மாவட்ட அளவில் முன்னிலையில் உள்ளது. 93.22 சதவிகித தேர்ச்சியுடன் வயநாடு கடைசி இடத்தில் உள்ளது.மாநிலத்தில் 599 அரசுப் பள்ளிகளும் 713 உதவி பெறும் பள்ளிகளும் 391 சுயநிதி பள்ளிகளும் நூறு சதவிகிதம் தேர்ச்சி கண்டுள்ளன.