tamilnadu

டிவி, ஸ்மார்ட் போன் இல்லை என்பதால் ஆன்லைன் கற்றலுக்கு தடை ஏற்படாது கேரள முதல்வர் உறுதி

திருவனந்தபுரம், ஜுன் 4- பள்ளி மாணவர்கள் மீண்டும் பார்க்க வசதியாக ஆன்லைன் வகுப்புகளின் வீடி யோக்கள் யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் வெளியிடப்படும் என்று முதல்வர் கூறி னார். அனைத்து மாணவர்களும் பாடங் களை தவற விடாமல் படிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறு கையில், கேரளத்தில் 41 லட்சம் மாணவ மாணவிகள் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பொதுக்கல்வியின் பகுதி யாக உள்ளனர். பிளஸ் 1 தவிர்த்த கணக்க இது. பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இதுவரை நடைபெறவில்லை. ஜுன் மாதம் பள்ளிக் குழந்தைகளின் வகுப்புகள் தொடங்கும் காலமாகும். கோவிட் பின்னணியில் பள்ளி கள் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நமது குழந்தைகளுக்கு படிப்பதற்கான வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது என்றார்.

ஆன்லைன் வகுப்புக்கு வரவேற்பு 
கல்வித்துறை ஆன்லைன் வகுப்பு களுக்கான திட்டத்தை வடிவமைத்தது. விக்டேழ்ஸ் தொலைக்காட்சி சானல் மூல மும், சமூக வலைத்தள வசதிகளை பயன் படுத்தியும் குழந்தைகளை கல்வி கற்கச் செய்வது என்பது முடிவு. அதன் பகுதியாக ஜுன் 1 முதல் ஆன்லைன் பாடம் தொடங்கி யது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பல வகுப்புகள் குழந்தைகளுக்கும் பெற் றோருக்கும் நன்றாக பிடித்திருந்தது என் பதை அவர்களது எதிர்வினையில் இருந்து புரிந்து கொள்ள முடிந்ததாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.  மேலும், பொதுக்கல்வித்துறை முதல் முறையாக இத்தகைய ஆன்லைன் வகுப்பு களை ஏற்பாடு செய்திருந்தது. 41 லட்சம் மாணவ மாணவிகளையும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கச் செய்வது என்கிற மிகப்பெரும் பொறுப்பு நம்முன் இருந்தது. இதற்காக ஆசிரியர்களே மாணவர்களை யும், பெற்றோரையும் தொடர்பு கொள்ள வும், ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட் டது.

வாய்ப்பற்ற  2.61லட்சம் மாணவர்கள் 
கல்வித்துறையின் கணக்குகளின்படி 41 லட்சத்தில் 2,61,784 மாணவர்களுக்கு ஆன்லைன் கற்றலுக்கு வசதி இல்லை என்பது கண்டறியப்பட்டது. அரசைப் பொறுத்தவரை இந்த மாணவர்கள் அனை வரும் ஆன்லைன் ஏற்பாடுகளுக்குள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியவர் களாவர். இவர்களுக்கும் கற்றலை சாத்தி யப்படுத்த முடியும் என்கிற உறுதிப்பாடு அர சுக்கு உள்ளது. சில மாணவர்களின் வீடு களில் டிவி இல்லை. வேறு சிலருக்கு ஸ்மார் போன் இல்லை போன்ற பிரச்சனைகள் இருந்தன. இவற்றை கையாள்வதற்கான முயற்சிகளிலும் கல்வித்துறை ஈடுபட்டது என்றார்.  ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்க முடி யாத மாணவர்களுக்கு வசதிகள் செய்துதர உள்ளாட்சி அமைப்புகள், ஆசிரியர்கள், பிடிஏ, குடும்பஸ்ரீ போன்றோரின் தலைமை யில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய மாணவர்களின் கற்றல் வசதிக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியையும் கல்வித்துறை நாடியுள்ளது. ஆளும் கட்சி எதிர்கட்சி வித்தியாசம் இல்லாமல் இம்முயற்சி நடந்து வருகிறது.

இலவச டிவி வழங்க ஏற்பாடு
நூலகம், அருகமை வகுப்புகள், வட்டார திறன் மையம், ஊர் கல்வி மையம், சமுதாய கல்விக் கூடங்கள் போன்ற பொது இடங்க ளில் ஆன்லைன் வகுப்புகளை பார்க்கும் வசதி செய்யப்பட்டு வருகிறது. கேஎஸ்எப்இ போன்ற நிறுவனங்கள் இதற்கான திட்டம் தயாரித்து வருவது குறிதது முந்தைய செய்தி யாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநில பிவரேஜ் கார்ப்பரேசன் 500 தொலைக் காட்சி பெட்டிகள் வாங்கி வழங்க முடிவு செய்துள்ளது. பல்வேறு மாணவர், இளை ஞர் அமைப்புகளும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட் டார்.  பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நமது குழந்தைகளை தாமதமின்றி கற்றல் சூழலுக்கு மீட்டு வருவது என்பதே முக்கி யம். இந்த ஏற்பாடு பள்ளியில் படிப்பதற்கு மாற்றோ அல்லது அதற்கு இணையானதோ அல்ல என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இத்தகு நிகழ்வு குழந்தைகளின் மனதளவிலான வளர்ச்சிக்கும் தவிர்க்க முடி யாததாக கருதப்பட்டது. இந்த நோக்கத்தை முழுமையாக உள்வாங்காமல் இப்போது சில விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின் றன என்று முதல்வர் கூறினார்.