tamilnadu

விசாரணை அமைப்புகளுக்குமேல்பறக்கும்வல்லூறு அரசின் வளர்ச்சித் திட்டங்களை தகர்க்கும் முயற்சி.... கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்:
விசாரணை அமைப்புகளுக்குமேல் கட்சி அரசியல் என்கிற வல்லூறுபறந்தால் அதைஏற்றுக் கொள்ள முடியாது என்றும்இதுஅரசின்வளர்ச்சித்திட்டங்களைதகர்க்கும்முயற்சிஎன்றும்கேரளமுதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.சிலபுலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகள்காரணமாக அரசமைப்பின் சாராம்சம் மீறப்படும்போது, ​​சிலவற்றை கூறாமல்விட்டுவிட முடியாது.ஆனால்,எந்தவொரு முகமை அல்லது அதிகாரியைகுறை கூறும்
எண்ணம் இதில்இல்லை என்று முதல்வர் தெளிவுபடுத்தினார்.

திங்களன்றுநடந்தசெய்தியாளர்கள்சந்திப்பின்போதுஅவர்மேலும்கூறியதாவது: தங்கக் கடத்தல் தொடர்பானவழக்கில் அரசாங்கம் வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நாட்டின் நிதி பாதுகாப்பை சீர்குலைப்பது குறித்து விரிவான விசாரணைக்கு அழைப்பு விடுத்ததோடு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அவர்களுக்குவழங்குவதாகவும்அரசுதரப்பில்தெரிவிக்கப்பட்டது. விசாரணை நியாயமாகதொடரும் என்று மாநிலஅரசு நம்பியது.தொடக்கத்தில் விசாரணை சரியான பாதையில் சென்றது. ஆனால் விசாரணைமுகமைகளின் அதீதமானதலையீடு எதிர்பார்ப்புகளைச் சிதைத்தது.

வரம்பு மீறும் விசாரணை
ஏதேனும்வெளிப்பட்டு விடுமோஎன்கிற அச்சம் கேரள அரசுக்கு உள்ளதாக பிரச்சாரம் செய்ய வழிவகுக்கும்சம்பவங்கள்நடக்கின்றன. ரகசியமாக நடக்கவேண்டியவிசாரணை அப்படிநடக்கவில்லை. விசாரணைக் குழுவுக்கு வெளியே உள்ளவர்கள் விசாரணைக் குழு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிவிக்கத் தொடங்கினர். வாக்குமூலத்தின் பகுதிகள் ஊடகங்கள்விரும்பியபடி தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் கசியத் தொடங்கின. விசாரணை தொழில் ரீதியாக திறந்த மனதுடன் நடக்கவேண்டும்.கட்சி அரசியலுக்கு அப்பால்சென்று ஆதாரங்களின் அடிப்படையில்செயல்பட வேண்டிய விசாரணை முகமைகள் எல்லாவற்றிலிருந்தும் விலகிச் செல்லும்போது ‘நீதி எங்கே ?’என்ற கேள்விஎழுகிறது.முன்னரேஎழுதப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது. அப்படி இருக்கக்கூடாது. யாரை யெல்லாமோ குற்றவாளியாக்கவேண்டும்என்கிறஅனுமானத்துடன்நடப்பதை ஒருவிசாரணை என்று கூற முடியாது. தங்கக்கடத்தல் தொடர்பான விசாரணை லைப்மிஷன், இ-மொபிலிட்டி திட்டங்களைவந்தடைந்துள்ளது. இந்த திட்டங்கள் மீதெல்லாம் குற்றச்சாட்டுகளைஅவிழ்த்துவிடும்நிலைஏற்பட்டது. ஒன்றுக்குமேற்பட்டவிசாரணைஅமைப்புகள் வழக்கை கையாளுகின்றன.விசாரணை நிறுவனம் ஆதாரங்களை சேகரிக்க அதிகாரியை அழைக்கலாம். ஆவணங்களை சரிபார்க்கலாம். ஆனால் இதற்கெல்லாம் ஒரு எல்லை உண்டு. 

கசிய விடப்படும் வாக்குமூலங்கள்
சாபக்கேடாக உள்ளகறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் ஒன்று பணமோசடி தடுப்புச் சட்டம். இதைத் தாண்டிய தலையீடு விசாரணை நிறுவனங்களின் தரப்பில் உள்ளது. நிலமற்றவர்களுக்கு பாதுகாப்பானவீடுகள் உறுதி செய்வதை லைப் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. லைப்திட்டம் வெளிப்படையானது.ஆனால், அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களை இருட்டடிப்புசெய்யும் முயற்சிநடக்கிறது. ஒட்டுமொத்த லைப்திட்டத்தையே அழிக்கவும், இலக்கை அடைவதைத் தடுக்கவும்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புலனாய்வு அமைப்புகள் வரம்புகளை மீறுகின்றன. வரவு-செலவுகளை சரிபார்க்க சிஏஜிஉள்ளது.சிஏஜிக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் பணமோசடி தடுப்பு சட்டத்தின் படி செய்யப்பட வேண்டும்.எல்லவற்றையும்மத்திய புலன்விசாரணைநிறுவனங்களின் கைகளில்கொண்டு வரும்நிலைஇப்போது உள்ளது.மாநில அரசை மொத்த குற்றவாளியாகக் கருதி அரசியல் எதிரிகள் அதிகாரிகளை மனச்சோர்வடையச் செய்யலாம். ஆனால்விசாரணை நிறுவனங்களால் முடியுமாஎன்பதே கேள்வி. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அவற்றுக்கான எல்லைகள் உள்ளன. சத்தியவாக்குகூறிஒருவர்அளிக்கும்வாக்குமூலம்,எப்படி மற்றொரு வடிவத்தில் ஊடகங்களின் முன்புசென்றடைகின்றன? இந்த விசாரணையில் மக்களுக்கு ஏற்படுவதுநம்பிக்கையா அல்லது அவநம்பிக்கையா,விசாரணை அமைப்புகள் நியாயமானமுறையில்விசாரித்தால்தான்நம்பத்தகுந்ததாக இருக்கும்.

கேபோன் திட்டத்தை  தகர்க்கும் முயற்சி
திரைக்கதைக்குஏற்பவிசாரணை நகர்கிறது,என்கிறபுரிதல்ஏற்படுவது ஜனநாயக அமைப்புக்கு ஒரு பின்னடைவாகும். இது மக்கள் எதிர்பார்ப்பது அல்ல. அரசாங்கம் உதவி வழங்கும் என்று கூறுவதுஇந்த வகை
யான விசாரணைக்காக அல்ல. அனைத்துஅதிகாரங்களையும் ஏஜென்சிகள் ஆக்கிரமிக்கின்றன. இது அவர்களின் சொந்த அதிகாரத்தை மீறுவதும்அரசமைப்பை மீறுவதுமாகும். மாநில அரசு சட்டத்தின்வரம்புக்குள்நின்று தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.இந்த அரசுமுன்னோடியில்லாத வகையில் கேரளாவில் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவற்றை சிறுமைப்படுத்த புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டும்  எவரையும் குறைசொல்ல முடியாது.எடுத்துக்காட்டு ‘கேபோன்’ திட்டம்.அதற்குஇடையூறுசெய்வதைமக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.இணைய பயன்பாட்டை உரிமையாகஅறிவித்த முதல்மாநிலம் கேரளமாகும்.52000 கி.மீஆப்டிகல் ஃபைபர் கேபிள் போடப்பட்டுள்ளஒரு தொலைபேசி நெட்வொர்க்கேபோன்.எந்த வீட்டுக்கும்இணைய வசதி கிடைக்கும்.கேபோன்திட்டத்தைதகர்க்க முயற்சிப்பவர்களுக்கு சொல்ல வேண்டியது என்னவென்றால், இந்த திட்டம் எந்த விலைகொடுத்தாலும் செயல்படுத்தப்படும் என்பதாகும். எந்தவொரு நியாயமான விசாரணையுடனும் அரசுஒத்துழைக்கும்.

பகுத்தறியும் மக்கள் சக்தி
நீதிமன்றத்திடம் மனசாட்சியை எதிர்பாக்கும் லையும் அரசுக்கு இல்லை. விசாரணை முகவர் மீது கட்சி அரசியலின்பருந்து பறந்தால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தவறான வழிமுறைகளைஎந்த காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளமுடியாது. கொள்கைசார்ந்த உரிமைகளை எவரிடமும் அடமானம் வைக்க முடியாது. ஊடகங்களின் பங்கையும்கூறாமல் இருக்க முடியாது. அரசாங்கத்திற்கு எதிரான நாசகரமான நடவடிக்கைகளையும் ஊடகங்கள்
ஆதரிக்கின்றன. சுதந்திரம் என்ற போர்வையில் ஊடகங்கள் இதை செய்கின்றன.ஒரு நாள் கூடஆயுள்இல்லாத செய்திகளைக் கொண்டாடுவதற்குப் பின்னால் அதே அணுகுமுறைஉள்ளது.எந்த தாக்குதலுக்கு முன்பும் தகர்ந்து விடப்போவதில்லை.எல்லாவற்றையும் பகுத்தறியும் மக்களின் சக்தியை யாரும்குறைத்து மதிப்பிடக் கூடாதுஎன்று முதல்வர் கூறினார்.