கேரளாவில் 105 வயதான மூதாட்டி 4 ம்வகுப்பு தேர்வு எழுதி அசத்தியுள்ளார்.
இந்தியாவில் கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரளாவில் 105 வயது நிரம்பிய பகீரதி அம்மா வசித்து வருகிறார். இவருக்கு அவர்
6 பிள்ளைகளும் 16 பேரன் பேத்திகளும் உள்ளனர். அவர் 9 வயது இருக்கும் போது 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது உடன் பிறந்தவர்களை பார்த்துக் கொள்ள வேண்டியிருந்ததால் படிப்பை நிறுத்திக்கொண்டார். இந்நிலையில் 105 வயதான நிலையில் தற்போது விடா முயற்சி மற்றும் ஆர்வத்துடன் தற்போது 4ம் வகுப்பு தேர்வை எழுதி முடித்துள்ளார்.
இதுகுறித்து தேர்வு அதிகாரி பிரதீப் குமார் கூறுகையில், 'பாட்டி பகீரதி அம்மா அனைத்து தேர்வுகளையும் எழுதி முடித்துள்ளார். எந்த வயதிலும் கல்வி கற்க விரும்புவோருக்கு அவர் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்' என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு 96 வயது பாட்டி ஆரம்ப பள்ளி படிப்பை 98 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.