tamilnadu

img

பெண் கல்விக்கும், சமூக நீதிக்கும் எதிரானது தேசிய கல்விக் கொள்கை: மாதர் சங்கம்

கிருஷ்ணகிரி, ஜூன் 24- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக் குழு கூட்டம்  ஓசூரில் இரண்டு நாட்கள் நடை பெற்றது. அகில இந்திய துணைத் தலைவர்கள் வாசுகி, சுதா சுந்தர்ராமன், மாநில பொதுச்செயலாளர் சுகந்தி, தலைவர் எஸ். வாலண்டினா, பொருளாளர் மல்லிகா, மத்தி யக் குழு உறுப்பினர்கள் பால பாரதி, அமிர்தம், பிரமிளா, மாநி லச் செயலாளர் சங்கரி கிருஷ்ண கிரி மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தலை வர் வெண்ணிலா, பொருளாளர் பெர்னாட் உட்பட மாநிலக் குழு  உறுப்பினர் கலந்து கொண்ட னர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செய லாளர் சுகந்தி மாநிலக்குழு கூட்  டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூறினார். தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள தண்ணீர் பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு, பெண்  கருக் கொலை, சிசுக் கொலை,  குழந்தை திருமணங்கள், குழந்தைகள், மாணவிகள் பெண்  கள் மீதான பாலியல் வன்கொடு மைகள், கொலைகள், வரதட் சனை கொடுமைகள், பெண் கல்வி உட்பட பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது என்றார். தமிழகத்தில் கடும் தண்ணீர்  பற்றாக்குறை தலைவிரித்தாடு கிறது. ஒன்றிரண்டு குடம் தண்ணீ ருக்கே மக்கள் இரவு பகல் என்று  பல கிலோ மீட்டர் தூரம் நடந்து  செல்ல வேண்டிய அவலம் உள்  ளது. ஆனால், பெப்சி-கோக் நிறு வனத்துக்கு திருநெல்வேலி ஆற்றை தாரை வார்த்துள்ள தமி ழக அரசு, கேரள அரசு இலவச மாக தருகிறோம் என்று கூறிய தண்ணீரை வேண்டாம் என மறுப்பது முறையல்ல என்றும் அவர் கூறினார். தமிழகம் முழுவதும் போர்க்  கால அடிப்படையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். பல  நேரங்களில் காவேரி நீரும், தென்பென்னை நீரும், வீணாக கடலில் கலக்கிறது. எனவே உட னடியாக ஏரி குளம், கால்வாய்  களை, தூர் வாரி, நீர் நிலை,  கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தொலை நோக்கு  பார்வையில் தமிழக அரசு  செயல்பட வேண்டும் என்றும்  சுகந்தி வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை அறிவிப்பு பள்ளி ஆசிரியர்கள், கல்வியா ளர்கள்,மாணவர்கள், பெற் றோர்கள் யாரிடமும் கருத்து கேட்காமல் எதேச்சதிகாரமாய் அறிவிக்கப்பட்டுள்ளது. 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு அறிவிப்பு என்பதும், மூன்றாம் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை ஒரே வளாகத்தில் படிக்கலாம் என்பதும் மறைமுகமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட  ஏழை எளிய மக்களுக்கும் குறிப்பாக அனைத்து பகுதி பெண்களையும் கல்வி கற்க  விடாமல், மறுக்கும் செயலா கும்.  பெண்கள், சிறுமிகள் மாண விகள் கடும் தொந்தரவுகளை சந்திக்க நேரிடும், அத்துடன்  ஊருக்கு அருகில் பள்ளிக்கூடங் களில் மாணவிகள் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. பல  சிறு சிறு ஆரம்பப் பள்ளிகள் மூடப்  படும் நிலை ஏற்படும். அந்தந்த மாநில மொழிகளுக்கு கல்வித் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க  வேண்டும், பிற மாநில மொழி களை திணிக்கக் கூடாது - இது குறித்து மத்திய அரசு முதலில்  அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் சுகந்தி கோரிக்கைவிடுத்தார்.