கிருஷ்ணகிரி, ஜூன் 19- மேற்கு வங்க மாநி லத்தில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதற்கு நீதி கேட்டு கிருஷ்ணகிரியில் இந்திய மருத்துவர்கள் சங்கம், பல் மருத்துவர்கள் சங்கம், மற்றும் சிஐடியு இந்திய பாரா மெடிக்கல் ஊழியர்கள் சங்கம், இணைந்து சங்கத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் தனசேகரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல் மருத்துவர்கள் சங்கத் தலைவர் பாஸ்கர், செய லாளர் கஜபதி சிஐடியுவின் இந்திய பாரா மெடிக்கல் சங்கத் தலைவர் செல்வராஜ், செயலாளர் சுப்பிரமணி, மாநில துணைத் தலைவர் குமுதன், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கண்டன உரையாற்றினர். ஓசூரில் மருத்துவர்கள் சங்கத் தலைவர் தன சேகரன் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து ஒரு நாள்அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். மருத்து வர்கள் சங்க துணைத் தலைவர் பிரதீப் குமார், செயலாளர் செந்தில், பொரு ளாளர் விவேக் மூத்த மருத்துவர்கள் சண்முக வேல், பாலசுப்ரமணியன், சுந்தர்ராஜன், மற்றும் பல மருத்துவர்கள் குணம் மருத்துவமனை மருத்து வர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.