இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சஞ்சய் பாங்கர் (பேட்டிங்), பரத் அருண் (பந்துவீச்சு), ஸ்ரீதர் (பீல்டிங்) உள்ளிட்ட 7 பேரின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடரு டன் நிறைவடைந்த நிலையில், விண்டீஸ் சுற்று ப்பயணத்துக்காக 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்த அடுத்த சில நாட்களில் புதிய பயிற்சியாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் வெளியிடப்பட்டது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிசிசிஐ-யிடம் அளிக்க ஜூலை 31 கடைசி நாள் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், புதனன்று அதற்கான அவகாசம் நிறைவடைந்தது. இதுவரை 2 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி நியமிக்கப்பட்ட கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைமை பயிற்சி யாளரைத் தேர்வு செய்ய உள்ளது. மற்ற பயிற்சி யாளர்களைத் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான குழு தேர்வு செய்யும். அக்டோபர் 22-ஆம் தேதி பயிற்சியாளர் தேர்வு நடைபெறும் உத்தேச தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்னரே பயிற்சி யாளர் யார் என்பது முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 6பேர்
ஐபிஎல் ஹைதராபாத் அணியின் பயிற்சி யாளராக இருக்கும் டாம் மூடி, நியூஸிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தொடக்க வீரர் கேரி கிர்ஸ்டன், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் தலைமை பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும் கேப்டன் கோலியின் விருப்பத்திற்கேற்ப ரவி சாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் செய்திகள் கசிந்துள்ளன.