விதிமுறைகளை பின்பற்றாத கர்நாடகா வங்கிக்கு 1.2 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தனியார் வங்கியாக கர்நாடகா வங்கி மங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி சொத்து வகைப்படுத்துதல் வேறுபாடு மற்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று ரிசர்வ் வங்கி குற்றம் சாட்டி உள்ளது.
இது 1949ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 47 A (1) (C) மற்றும் 46(4) (I) விதிகளின் கீழ் ரிசர்வ் வங்கியில் அனுமதிக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, அறிவுரையும் வழங்கப்பட்டது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கர்நாடக வங்கியோடு சேர்த்து பேங்க் ஆப் இந்தியா மற்றும் சரஸ்வத் கோ ஆப்ரேட்டிவ் பேங்க் ஆப் இந்தியாவுக்கும் சேர்த்து 6.50 கோடி ரூபாய் அபாரத்தினை விதித்துள்ளது.
இது அதிகபட்சமாக பேங்க் ஆப் பரோடாவுக்கு 5 கோடி ரூபாயும், இதே கர்நாடக வங்கிக்கு 1.2 கோடி ரூபாயும், இதே சரஸ்வத் கோ ஆப்ரேட்டிவ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு 30 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் கர்நாடக வங்கியின் பங்கு விலையானது 3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே பேங்க் ஆப் இந்தியா பங்கின் விலையானது 156 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 31.50 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.