tamilnadu

img

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம்

14 ஆவது  ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்திஅனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் செவ்வாயன்று (மார்ச் 10) துவங்கியது.இந்த போராட்டத்தில் சிஐடியு பொதுச் செயலாளர்  நந்தகோபால், தலைமை ஒருங்கிணைப்பாளர் எல்பிஎஃப் கே.ரவி, இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.மதுசூதனன், மாவட்டப் பொருளாளர் வசந்தா, எச்எம்எஸ் ஆபத்சகாயம், ஐஎன்டியுசி ராம.நீராளன், ஏஏஎல்எல்எப் எஸ்.செல்வம் உட்பட பலர் பேசினர்.