கள்ளக்குறிச்சி,ஆக. 22- ஒவ்வொரு மாதமும் மாற்றுத்திறனாளி களின் சிறப்பு குறைதீர் கூட்டத்தை கோட்டாட்சி யர் முறையாக நடத்திட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் கோட்டாட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் மேற்கண்ட சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களை சீனியாரிட்டி அடிப்ப டையில் பரிசீலித்து குறைகளை போக்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் 4 மணி நேர பணிக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும், ஊராட்சிகளில் முறையாக கணக்கெடுத்து தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும், அரசின் நலத்திட்டங் களை முறைகேடின்றி வழங்க வேண்டும், அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளை சில நடத்துனர்கள் இழிவாக பேசுவதை தடுக்க வேண்டும், வங்கிக்கடன் கோரியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 5.3.2019 அன்று கள்ளக் குறிச்சியில் நடைபெற்ற பேச்சு வார்த்தை முடிவின்படி கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் வேலு தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், துணைச் செயலாளர் கே.பி.பாபு, விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலை வர் பி.முருகன், செயலாளர் எம்.ஆறுமுகம், பொருளாளர் கே.சாந்தி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். பின்னர் கோட் டாட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உடன்பாடு ஏற்பட்டதால் காத்திருப்பு போராட் டம் முடிவுக்கு வந்தது.