tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள்  காத்திருப்பு போராட்டம் 

குளித்தலை, அக்.2- மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்திற்கு மருத்து வர்களை வரவழைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடை யாள சான்று இரயில் பாஸ், பேருந்து உதவியாளர் பாஸ் போன்றவற்றை வழங்க கோரியும், மாநில வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவின்படி உதவித்தொகை பெற்றிட ஏ.டி.எம் கார்டு வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி கரூர் மாவட்டக் குழுவின் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நம்பு ராஜன் தலைமை வகித்தார். பாலசுந்தரம், கணேசன், பன்னீர்செல்வம், அமுதா, நாகராஜ், கண்ணகி, அமுத வள்ளி, கேசவன் மற்றும் மா.து.தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் கணேசன் மாவட்ட பொருளாளர் ராஜு, வி.ச.மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல். ராஜா, பழனி வேல், வி.தொ.ச மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.