கரூர், பிப்.22- கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், பள்ளபட்டியில் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து நடை பெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பி னர் ச.கணேசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் கே.வி.கணே சன், ஒன்றிய செயலாளர் சிஆர்.ராஜ முகமது, ஆறுமுகம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.ரத்தினம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கே.என்.நாட்ராயன், தங்க வேல், சிபிஐ மார்க்சிஸ்ட் (லெனிஸ்ட்) கட்சியின் ஒன்றிய செயலாளர் அப்துல் ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.ஷேக்பரீத், நகர செயலாளர் ராஜமுகமது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் இடதுசாரி கட்சிகளின் சார்பில் கரூர் நகரத்திற்கு உட்பட்ட வெங்கமேடு தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஐ(எம்எல்)எல் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எம்.ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் தண்ட பாணி, ஹோச்சுமின், நகரக் குழு உறுப்பி னர்கள் ராமகிருஷ்ணன், சக்திவேல் தியாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் பேசி னர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.