நாகர்கோவில், அக்.12- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தக்காளிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின். ஜே.சி.பி ஆபரேட்டரான இவர் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் புதிதாக ஜே.சி.பி. ஒன்றை வாங்கி சொந்தமாக தொழில் செய்து வந்தார். பின்னர் மேலும் புதிதாக மூன்று ஜே.சி.பி. வாகனம், இன்னோவா கிறிஸ்டா மற்றும் மாருதி பிரீஷா என 6-வாகனங்களை எடுத்து அந்த பகுதியில் பெரிய தொழிலதிபராக வலம் வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்லின் குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், கருங்கல் காவல் நிலையத்தில் உள்ள சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமை காவலர் இருவரும் ரவுடி கும்பலுடன் வந்து தன்னை மிரட்டி நாகர்கோவில் நெல்லை நெடுஞ்சாலையில் ஒரு பகுதிக்கு கடத்தி சென்றனர். பின்னர், நீ ஜே.சி.பி ஆபரேட்டராக பணி புரியும் போது தங்க புதை யல் கிடைதுள்ளது. அதை வைத்துதான் சொகுசு கார் மற்றும் ஜே.சி.பி வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்கிறாய். எனவே அதில் எங்க ளுக்கு பங்கு தந்தால் வெளியே சொல்லாமல் நமக்குள்ளே முடித்து கொள்வோம் என கூறியதுடன் தனது நகைகள் மற்றும் சொகுசு கார்கள் இரண்டையும் பறித்து சென்று விட்டனர் என புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து விசாரிக்க குளச்சல் ஏ.எஸ்.பி கார்த்திக் தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படையினர் வாலிபர் ஜெர்லின் மற்றும் கருங்கல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரிடம் விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் இருவரும் தாங்கள் ஜெர்லின் மீது வந்த மொட்டை கடித புகாரின் பேரில் அவரை பிடித்து விசாரிக்கத்தான் செய்தோம் என்றும் கடத்தலுக்கும் தங்களுக்கும் தொடர் பில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து ஏ.எஸ்.பி கார்த்திக் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவல ரை காவல் நிலைய பணியில் இருந்து விடு வித்து கொல்லங்கோடு சோதனை சாவ டிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வாலிபரை மிரட்டி கடத்தி சென்ற ரவுடி கும்பல் யார் எனவும் வாலிபருக்கு வாகனங்கள் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கி டையில், அந்த மர்ம கும்பல் ஜெர்லினிடம் இருந்து பறித்த சொகுசு கார்களை சாலை யோரம் நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. அந்த கார்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.