கனடா அரசு திமிங்கலம் மற்றும் டால்பின்களை தனியார்கள் வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் தடை விதித்துள்ளது.
இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் ஃப்ரீ வில்லி என்ற புதிய சட்டம் கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை வளர்ப்பதற்கும் இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்துவதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.