கடலூர், செப். 23- வேப்பூர் கூட்டுரோட்டில் சாக்கடை தேங்கி நிற்பதை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோட்டில் திருச்சி சென்னை, சேலம் கடலூர் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் சாக்கடை தேங்கி நிற்கி றது. தற்போது பருவ மழை பெய்து வருவ தால் மழைநீர் சாக்கடையில் கலந்து மேலும் துர்நாற்றம் வீசுகிறது, அதில் உற்பத்தி யாகும் கொசுக்களால் பொதுமக்களுக்கு காய்சல் ஏற்படுகிறது. இது குறித்து தேசிய நெடுஞ் சாலைத் துறை, நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வில்லை. சாக்கடையை அகற்றி வடிகால் வாய்க்கால் அமைக்கக் கோரி கூட்டு ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக் குழு உறுப்பினர் நல்லூர் சாமிதுரை தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். சிவஞானம், கிளைச் செய லாளர்கள் கே.முத்துசாமி, ஜி.வேல்முருகன், சம்பத், தூண்டிக்காரன், வீரமணி, பாண்டி யன், நகர் சோமு, சேப்பாக்கம் கணேசன், பெரியசாமி, வாலிபர் சங்க வட்டத் தலைவர் இளைராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.