கடலூர், டிச. 21- கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சி லர் பதவிக்குப் போட்டியி டும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பா ளர்கள் வாக்கு சேகரிப்பு பிரச் சாரத்தை மாவட்டச் செயலா ளர் டி. ஆறுமுகம் துவக்கி வைத்தார். கடலூர் ஒன்றிய கவுன்சி லர் 23வது வார்டு நடுவீரப் பட்டு சி.என். பாளையம் பகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.தட்சிணாமூர்த்தியை ஆதரித்து கடை வீதிகளில் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ.வைத்திய லிங்கம், ஜி.கணேசன், கிளைச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜன், நடராஜன், சேகர், குமார், ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியம் திருத் துறையூர் அக்கடவல்லி 4 வது வார்டு ஒன்றிய கவுன் சிலர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணா கிராமம் ஒன்றியச் செயலாளர் ஆர்.லோக நாதன் பிரச்சாரத்தைத் தொடங் கினார். மாவட்டக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர் கள் பி.ஆதவன், கே.முரு கன், எஸ்.நாராயணன், நிர்வாகிகள் அம்பிகாபதி, மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சசிகுமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். பண்ருட்டி ஊராட்சி ஒன்றி யத்தில் 3 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.பன்னீர் ராயர் பாளையத்தில் பிரச் சாரத்தைத் துவக்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.உதயகுமார், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். கே.ஏழுமலை, நகரச் செய லாளர் ஆர்.உத்திராபதி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ஜீவானந்தம், கே. சேகர், கிளைச் செயலாளர் கள் ஆர்.அர்ச்சுனன், எம். மஞ்சுளா, ஆர்.வெங்கடே சன், ஆர்.சீனிவாசன், எம்.பழனிவேல், ஜெ.சித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பிரச்சாரங்களை மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் துவக்கி வைத் தார் மாநிலக்குழு உறுப்பி னர் மாதவன் கலந்து கொண்டார்.