tamilnadu

img

காரல் மார்க்ஸ் வெண்கல சிலைக்கு பித்தளை வெண்கலப் பொருட்கள் சேகரிப்பு

கடலூரில் நிறுவப்பட உள்ள காரல் மார்க்ஸ் வெண்கல சிலைக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்களிடம் இருந்து பித்தளை, வெண்கலப் பொருட்கள் சேகரிக்கப்படுகிறது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, புவனகிரி பகுதியில் சேகரிக்கப்பட்ட பித்தளை பொருட்களை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கினர். இதில் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் மூசா, கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன், மாதர் சங்கத் தலைவர் அமுதா, செயலாளர் மல்லிகா, நகர் குழு உறுப்பினர் கலியமூர்த்தி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.