tamilnadu

img

பானிபுயல்:ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்தி வைப்பு

பானிபுயல் பாதிப்பில் ஒடிசா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை நடைபெறும் நீட் தேர்வை ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

ஒடிசாவில் நேற்று பானி புயல் கரையைக் கடந்தது.இந்த புயலின் தாக்கத்தில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் பல மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பானி புயலால் ஒடிசாவில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் நாளை நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஒடிசா தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது.