tamilnadu

img

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

திருப்பூர், டிச. 5 – திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வியாழனன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர், மாவட்டத் தேர்தல் அலுவலர் கே. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:  மாநில தேர்தல் ஆணையத்தின்  உத்தரவின்படி, டிசம்பர் 27ஆம்  தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர், ஊத்துக்குளி,  காங்கயம், பல்லடம், வெள்ளக் கோவில், மூலனூர், தாராபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றிய பகுதி களில் முதற்கட்ட தேர்தல் நடை பெறும். டிசம்பர் 30ஆம் தேதி அவி நாசி, பொங்கலூர், குண்டடம், குடி மங்கலம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும்

இன்று வேட்புமனு

வேட்புமனு தாக்கல் வெள்ளிக் கிழமை (இன்று) துவங்குகிறது. மாதிரி நடத்தை விதி ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் பொருந்தும்.  நகர்ப்புறப் பகுதிகளுக்கு தேர்தல் கள் அறிவிக்கையின்போது, நகர்ப்புற பகுதிகளுக்கு மட்டும் நடத்தை விதி பொருந்தும்.  இத்தேர்தலில், 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,  170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் 2295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.  திருப்பூர் மாவட்டத்தில் கிராமப் புற உள்ளாட்சிகளில் மொத்த வாக் காளர்கள் 9 லட்சத்து 95ஆயிரத்து  765 பேர். 13 ஊராட்சி ஒன்றியங் களில் உள்ள 1704 வாக்குச் சாவடிகள் 129 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 13 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. மேலும், இத்தேர் தலை நடத்துவதற்கு 28 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 363 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தேர்தல் செலவு வரம்பு

கிராம ஊராட்சி வார்டு உறுப் பினர் ரூ.5,625, கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.22,500, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப் பினர் பதவிக்கு ரூ.56,250 மற்றும்  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர் பதவிக்கு ரூ.1,12,500 செல விட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  அரசு சார்பு வாகனங்களை எந்த ஒரு அமைச்சரோ, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது வேட்பாளரோ, அவரைச்  சார்ந்த வேறு  நபரோ பயன்படுத்தக்  கூடாது.வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலை விற்குள் எந்த வேட்பாளரது முகாமும் அமைக்கப்படக் கூடாது என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் ஆர்.சுகுமார்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை  திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர் ராஜ், திட்ட இயக்குநர் கோமகன்  (மகளிர்திட்டம்), மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர்கள் சந்திரகுமார் (தேர்தல்), சாகுல் ஹமீது (பொது), தேர்தல் வட்டாட் சியர் ச.முருகதாஸ், அரசு அலுவ லர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து  கொண்டனர்.