சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள் ளது. சென்னையில் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 9 ஆயி ரத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து சென்னையில் 758 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து அந்த பகுதி யில் உள்ளவர்கள் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமையன்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறுகையில், சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரு கிறது. மணலி, மாதவரம், அம்பத்தூர், தண்டையார்பேட்டை, ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூர் மண்டலங்க ளிலும் குறைந்து வருகிறது. குடிசை பகுதிகளிலும் நோய்த் தொற்றை கண்டறியும் பணியில் ஈடு பட்டு வருகிறோம். சவாலான பகுதி களான ராயபுரம், கோயம்பேடு உள் ளிட்ட பகுதிகளில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணியும் பழக்கத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரி வித்தார்.