tamilnadu

img

ஊழல் பட்டியல்....

சென்னை, மார்ச் 11- சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டா லின் கூறுகையில்,“ தேசிய மக்கள் தொகை  பதிவேட்டை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். அதை ஏற்கவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் தேவை யில்லாத கேள்விகள் உள்ளன. இதனால் என்ன  பாதிப்பு என்பதை நான் பேரவையில் விவர மாக எடுத்து கூறினேன்.  தீர்மானத்தை நிறைவேற்ற ஏன் பயப்படு கிறார்கள் என்றால், தீர்மானம் போட்டால் ஆட்சிக்கு ஆபத்து வரும். ஊழல்கள் குறித்து  சி.பி.ஐ. விசாரணை வரும் என பயப்படு கிறார்கள். எனவேதான் தீர்மானத்தை நிறை வேற்ற மறுக்கிறார்கள். அமைச்சர் திரும்ப திரும்ப தவறான தகவலையே தெரிவிக்கிறார்” என்றார்.