tamilnadu

img

தமிழகத்தில் கனமழை: முதலமைச்சர் ஆலோசனை

சென்னை, அக். 22- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தி ருப்பதால் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தலைமையில் ஆலோசனை நடத்தப் பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்  வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்க மணி, வேலு மணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலை மைச் செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மை துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து உள்ளதால் அங்கு செய்ய வேண்டிய  முதல் கட்டப் பணிகள் குறித்து விவாதிக் கப்பட்டது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நிவாரணப் பணி களை விரைந்து செய்வது குறித்து அதிகாரி களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு மழை  நீடிக்கும் என்பதால் மிகவும் தாழ்வானப் பகுதிகளில் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது. சாலைகளில் விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப் படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இவை தவிர எதிர்பாராமல் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொள்பவர்களை மீட்க தயார் நிலையில் படகுகளை வைக்கவும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. எந்  தெந்த மாவட்டங்களில், எத்தனை ஊர்களில் மீட்புப் பணிகளுக்கு அதிகாரிகள் தயார் நிலை யில் இருக்க வேண்டும் என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. இவை தவிர மழைக்  கால நோய்கள் தடுப்பு பற்றியும் கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

ரெட் அலர்ட் வாபஸ்

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்  ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல  தலைவர் பாலச்  சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில்,“வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும். இதன் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய  மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதீத கனமழைக்கு வாய்ப்பு இல்லை” என்றார். சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும். விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் 2 நாட்க ளுக்கு கன மழை நீடிக்கும். சூறைக்காற்று வீசும் என்பதால் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்  என அறிவுறுத்தினார்.