tamilnadu

img

தமிழகத்தில் இன்று புதிதாக 5,395 பேருக்கு கொரோனா தொற்று: 62 பேர் பலி

தமிழகத்தில் இன்று 5,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்   கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,25,391 ஆக அதிகரித்துள்ளது.  
இன்று 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,846  ஆக அதிகரித்துள்ளது. 
மேலும் 5,572 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,69,664 பேர் குணமடைந்துள்ளனர்.