சென்னை,டிச.5- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பா ளர் சீமானுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி யளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து அவதூறாக பேசியதாக தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசுக்கும், முதலமைச்ச ருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய சீமானை, அவதூறு சட்டப் பிரிவு களின் கீழ் தண்டிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.