சென்னை, ஜூன் 14 , 6 ஆயிரத்து 491 காலிப்பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 14ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறி விப்பாணை வெளியிட்டு ள்ளது. குரூப் - 4 பிரிவில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரித் தண்டலர், வரைவாளர் ஆகிய பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 பணியி டங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் ஜூலை 14ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 16-ம் தேதிக்குள் எழுத்துத்தேர்வுக்கான கட்டணத்தை வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வானது செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தோருக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை 21 முதல் 30 என டி.என்.பி.எஸ்.சி. நிர்ணயித்துள்ளது.