ரூ. 39 ஆயிரம் கோடிக்கு ராணுவத் தளவாடங்கள்!
மிக் -29 ரக விமானங்க ளை மேம்படுத்தவும், எஸ்.யு-30 எம்.கே.ஐ ரகம் மற்றும் மிக்-29 ரக விமானங்களை ரஷ்யாவிட மிருந்து புதிதாக வாங்க வும், ரூ. 18 ஆயிரத்து 148 கோடிக்கு ராணுவத் தளவாட கொள்முதல் கவுன்சில் (Defence Acquisition Council - DAC) ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பில் பினாகா தளவாடங்கள், அஸ்திரா ஏவுகணைகள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏ-வாக இல்லாத 14 பேருக்கு அமைச்சர் பதவி
கடந்த மார்ச் 23 அன்றுகொரோனா கொள்ளைக்கு இடையிலும், காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மத்தியப்பிரதேசத்தில் பாஜக பதவிக்கு வந்தது. தற்போது 28 அமைச்சர்களின் பதவியேற்பையும் நடத்தி முடித்துள்ள அக்கட்சி, எம்எல்ஏ-வாகவே இல்லாத 14 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளது.
காவல்நிலையத்திலேயே 13 வயது சிறுமி வல்லுறவு
ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஒருவர், பிராமித்பூர் காவல்நிலைய த்திலேயே, இன்ஸ்பெக்டர் சந்திரமஜி உள்ளிட்ட போலீசாரால் தொடர்ந்து கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இதில் சிறுமி கர்ப்பமாகவே, இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருப்பதி கோயிலில் 10 பேருக்கு கொரோனா!
திருப்பதி ஏழுமலை யான் கோயில் தேவஸ்தானத்தில் பணி புரியும் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ப்பட்ட நிலையில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள், மேளம் வசிப்பவர்கள், விஜிலன்ஸ் ஊழியர்கள் என பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
நடிகை ஜெனிலியா உடல் உறுப்பு தானம்!
உலக மருத்துவர்கள் தினத்தையொட்டி நடிகைஜெனிலியா மற்றும் அவரது கணவர் நடிகர் ரித்தேஷ் ஆகிய இருவரும்தங்கள் உடல் உறுப்புக்களை தானம் செய்திருப்ப தாக சமூக வலைதளப்பக்கங்களில் அறிவித்துள்ளனர். “நாம் பிறருக்கு அளிக்கும் மிகப்பெரிய பரிசு வாழ்க்கை என்னும் பரிசு தான்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பாஜக தலைவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ்!
இறக்குமதி விலையை குறைத்ததன் மூலம் சீனநிறுவனங்களுக்கு ஆதரவுஅளித்ததாக தன்மீது குற்றம் சாட்டிய பாஜக துணைத் தலைவர் பிரபாத் ஜாஹா, மத்திய பிரதேச மாநிலத் தலைவர் வி.டி. ஷர்மா ஆகியோருக்கு மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மாற்றி அமைக்கப்படும் ஜிஎஸ்டி விகிதங்கள்!
தற்போதுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்களைச் சீரமைக்க உள்ளதாக நிதிச்செயலர் அஜய்பூஷன் பாண்டே தெரிவித்துள் ளார். இந்த நடவடிக்கை களில் ஜிஎஸ்டி வரி விகிதஅடுக்குகள் குறைப்பு, தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை இடம் பெறும். மேலும், இந்த சீரமைப்பால் வர்த்தகம் எளிதாக நடைபெற வழி கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.