வாரணாசி:
உத்தரபிரதேச (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் மாபெரும் பேரணி நடத்துகிறார். புதன்கிழமையன்று (மே 15) நடைபெறும் இந்த பேரணியில், சுமார் 2 லட்சம் பேரை திரட்ட காங்கிரஸ் திட்டமிடப்பட்டுள்ளது. வாரணாசியில், மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய்ராய் நிறுத்தப்பட்டுள்ளார். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார்.