உத்தரப்பிரதேசத்தின் பிரயாகராஜில் நச்சு கலந்த மதுபானம் குடித்து 6 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் பிரயாகராஜில் உள்ள ஒரு கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்துள்ளது. அங்கு விற்கப்பட்ட மதுவில் நச்சு கலந்து விற்கப்பட்டதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன், காரணமாக மதுபானக்கடை நடத்தி வந்த கணவன் மனைவி இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுபானம் அருந்தியவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுவில் நச்சு கலப்படம் இருந்ததால், உயிருக்கு ஆபத்தானதாக மாறியுள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் கிராமத்தை அடைந்து அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினார்கள். இதில், மதுபானக்கடை உரிமையாளர்கள் மீது மதுபானங்களை சட்டவிரோதமாக விற்றதாக பல வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதே போல அப்பகுதியில் 3 கடைகள் செயல்பட்டு வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு, உத்திரபிரதேசம் மற்றும் அண்டை மாநிலமான உத்தரகண்ட் ஆகிய இடங்களில் 100 க்கும் மேற்பட்டோர் நச்சு கலந்த மதுபானத்தால் இறந்துள்ளனர். இது சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்தல், உற்பத்தி செய்தல் போன்ற காரணங்களில் 130 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யப்பட்டனர். 2011 முதல், உ.பி. முழுவதும் எட்டு கலப்படம் செய்யப்பட்ட சோகங்களில் 175 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.