காலமானார் ,
உதகை, ஜூன் 16- நீலகிரி மாவட்ட சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ் அவர்களின் தாயார் தனலட்சுமி அம்மாள் (95) உடல் நலக்குறைவால் செவ்வாயன்று காலமா னார். கேத்தி கிராமம், மந்தாடாவில் வைக்கப்பட்டிருந்த அவ ரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.சங்கரலிங்கம், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சுந்தரம், செயலாளர் ஆர்.ரமேஷ், பொருளாளர் ஏ.நவீன், சந்திரன், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சம்மேளன துணைத் தலைவர் ஜெ.ஆல் தொரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் கோவை மண்டல பொதுச் செயலாளர் எம்.வேளாங் கன்னி, துணைப் பொதுச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஏற்காட்டில் கள்ள சாராயம் விற்றவர் கைது
ஏற்காடு, ஜூன் 16- ஏற்காட்டில் கள்ள சாராயம் விற்றவரை காவல் துறை யினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா, மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குட்டமாத்திக்காடு கிராமத்தை சேர்ந்த வர் வெள்ளையன் மகன் சண்முகம் (30). கூலித் தொழி லாளி. இவர் கள்ளசாராயம் விற்பதாக ஏற்காடு காவல் துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் ரகு, காவலர்கள் சந்திரன், காண்டீபன், சீனி வாசன் ஆகியோர் குட்டமாத்திக்காடு கிராமத்தில் இருந்த சண்முகத்தை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 3 லிட்டர் கள்ளசாராயத்தையும் கைப்பற்றினர்.