tamilnadu

இளைஞர் தற்கொலை? காவல்துறையினர் விசாரணை

ஈரோடு, ஏப்.1-ஈரோடு, ரங்கம் பாளையம் அடுத்த ரயில் தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் துண்டான நிலையில் கிடப்பதாக ஈரோடு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலர்கள் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.  இறந்த நபர் அந்த வழியாக தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை.இதுகுறித்து ஈரோடு ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

;