கோபி, செப். 23- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சன்னக்குழிதாசில் தோட்டத்தில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மரம் ஏறும் தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள அயலூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னகுழிதாசில் தோட்டத்தில் குடிசை வீட்டில் வசித்து வரு பவர் மரம் ஏறும் தொழிலாளி குமார். இவர் ஞாயிறன்று இரவு அதிகளவு மது போதை யில் வீட்டிற்கு வந்து தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இத னால் குமாரின் தாய் அவருடன் கோபித் துக்கொண்டு பக்கத்து வீட்டில் போய் படுத் துக் கொண்டுள்ளார். இதனையடுத்து குமார் மட்டும் தனியாக அவரது குடிசை வீட்டில் உறக்கியுள்ளார். இந்நிலையில் திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு முழுவதும் எரிந்துள் ளது. இதில் குடிசையினுள் தூங்கிக் கொண் டிருந்த குமார் உடல் கருகி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த தீ விபத்து குறித்து தீவிரவிசாரணை மேற்கொண்டனர்.