ஈரோடு, நவ. 2- ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலை யில், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்க ளின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட் சம் விவசாய நிலங்களின் நீராதாரமாக விளங்கி வரும் பவானிசாகர் அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்க ளாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து வரு கிறது. இதனால் இந்த ஆண்டில் இரண் டாவது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 101 அடியிலேயே இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளியன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 13 ஆயி ரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 102.45 அடியாக உள்ளது. அணையிலிருந்து அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 600 கன அடி யும், கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆயி ரத்து 500 கன அடி வீதம் என மொத் தம் 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.