ஈரோடு, ஜூலை 18- ஈரோடு மாநகரில் கனி மார்க்கெட் பகுதியிலிருந்து கடைகள் அப்புறப்படுத்தப் படும் நிலையில் பொதுமக்கள் மாநக ராட்சியில் முறையீடு செய்தனர். ஈரோடு மாநகரில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனிமார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரச்சந்தை, தினசரி சந்தை என ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல் பட்டு வருகின்றன. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்ட மாநக ராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற் கொண்டுள்ள நிலையில், இந்தக் கடை கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடைகளை அப்புறப் படுத்துவது குறித்து மாநகராட்சி ஆணை யாளர் இளங்கோவனிடம் பொதுமக்கள் முறையிட்டு பேசினர். அப்போது கடை களை அகற்ற போதிய கால அவகாசம் வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.