ஈரோடு, ஆக.21- ஈரோட்டில் முதல் வர் பங்கேற்ற நிகழ்ச் சியில் செய்தி சேகரிக் கச் சென்ற செய்தியாளர் மீது காவல்துறை அதி காரி தாக்குதல். ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா தினகரன் நாளிதழின் செய்தியாளராக சிவ ராஜ் இருந்து வருகி றார். இந்நிலையில் புதனன்று (ஆக.21) தமிழக முதல்வருக்கு பெருந்துறை அண்ணா சிலை அருகே சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் வரவேற்பு அளித்தார்.இந்த நிகழ்வை செய்தி சேகரிக்க சிவராஜ் அவரது இருசக்கர வாகனத்தில் மற்றோரு ஒரு செய்தியாளருடன் அந்த பகுதிக்கு சென்றுள்ளார். இந்த விழா நடக்கும் 500 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே அவரது இருசக்கர வாகனத்தை காவல் பணியில் இருந்த அ.பிரின்ஸ் ராயப்பன் (1916) கிரேடு 1 காவலர் தடுத்துள்ளார். அப்போது சிவராஜ் தான் நிருபர், முதவ்லரை போட்டோ எடுக்க செல்லவேண்டும் என கூறியபோது, காவல்துறை யினர் ஒருமையில் பேசி விட முடியாது என கூறி னார். அப்போது அவரோடு இருந்த சக நிருபர் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு வா நடந்து செல் வோம் என கூறியுள்ளார். அவரும் வண்டியை ஓரமாக நிறுத்த திருப்பியுள்ளார். அப்போது அந்த காவலர், சொல்ல சொல்ல கேட்காமலாயே போகிறாயாடா என சிவராஜ் கண்ணத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர் அவரது கையில் வைத்திருந்த குடையால் சரமாறி யாக அவரது முகத்தில் குத்தினர். இதில் அவரது முகத்தில் அணிந்திருந்த கண்ணாடி உடைந்தது. சரமாரியான இத்தாக்குதலால் நிலைகுலைந்து போன சிவராஜ் வண்டியை விட்டு விட்டு பாது காப்பு தேடி பொதுமக்கள் இருக்கும் பகுதியில் தஞ்ச மடைந்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக் களும், சிவராஜும் எதற்காக அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு அப்போதும் ஒருமையில் ஆவேச மாக பேசியுள்ளார். இந்நிலையில் அங்கு கூட்டம் கூடவே பெருந் துறை ஆய்வாளர் சரவனண் சம்பவ இடத்திற்கு வந்து சிவராஜ் மற்றும் காவலர் பிரின்ஸ் ராயப்பனை யும் காவல் நிலைத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் காவலர் தாக்கியதற்கு விளக்கம் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தார். இந்நிலையில் எந்த வித காரணமும் இல்லாமல் நிருபர் என கூறியும் ஆவேசமாக தாக்கிய காவலர் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கனேஷ் அந்த காவல் துறை அதிகாரியை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.