tamilnadu

img

இராக் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 93 பேர் பலி

பாக்தாத், அக்.5- இராக்  அரசுக்கு எதிராகக் கடந்த 5 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் குறைந்தது 93 பேர் உயிரிழந்துள்ளதாகப் பாது காப்பு மற்றும் மருத்துவ வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. வேலையின்மை அதிகரிப்பு, மோசமான பொதுச் சேவைகள், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிர்த்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திடீர் போராட்டம் வெடித்தது.

போராட்டங்களின் நியாயமான கோரிக்கைகள் கேட்கப்படும் என்றும் அவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் பிரதமர் அடெல் அப்டெல் மஹ்தி கோரினார். ஆயினும் நூற்றுக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள். இதனால் தலைநகர் பாக்தாத்தில், காலவரை யற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. அதோடு, இணைய சேவை களும் முடக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் கூடுவதைத் தடுக்க முடிய வில்லை. பாக்தாத்தின் தஹ்ரிர் சதுக் கத்தை நெருங்க போராட்டக்காரர்கள் முயற்சித்தபோது பாதுகாப்புப் படையினர் ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இராக்கில் நடைபெறும் வன் முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா. வும் அமெரிக்காவும் கவலை தெரி வித்துள்ளன. அதிகாரிகள் வன் முறையைக் கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.