tamilnadu

img

நிலமோசடிக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து தனியார் ஹோட்டலை அபகரிக்க முயற்சி

துணை முதல்வர் ஓ.பி.எஸ் தம்பி மீது புகார்

தேனி, டிச.24- நிலமோசடிக்காரர்களு டன் கூட்டு சேர்ந்து மேகமலை யில் உள்ள தனியார் ஹோட் டலை அபகரிக்க முயன்ற தாக துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா மீது புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே உள்ளது ஹை வேவிஸ் மலைப்பகுதி. இந்த மலைப்பகுதியின் ஒரு பகுதி யாக விளங்கும் மேகமலை கிராமத்தில், அய்யப்பன் மேக மலை ஹோம் ஸ்டே என்ற தங் கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு நான்கு பங்குதாரர் கள் இருந்துள்ளனர். பங்கு தார்களுக்கு உரிய நிலத்தை ஒதுக்கி விட்டு மூன்று பங்கு தாரர்கள் ஒப்புதலுடன் தனது  பங்கு நிலத்தில் சொந்த செல வில் தங்கும் விடுதி கட்டி தேனியை சேர்ந்த அய்யப் பன் என்பவர் நடத்தி வந்த தாக கூறப்படுகிறது. இதில் ஒரு பங்குதரரான கடமலை மயிலை ஒன்றியம் மண்ணூ த்தை சேர்ந்த தமிழன் என்ற தமிழ்ச்செல்வன் குடும்பத் தார் அய்யப்பனுக்கு இடை யூறு செய்து வந்ததாக கூறப் படுகிறது. இந்த பிரச்சனை யில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோ தரர் ஓ.ராஜா தலையிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி பிற் பகல் 2 மணி வாக்கில் மேக மலையில் உள்ள அய்யப் பன் மேகமலை ஹோம் ஸ்டே தங்கும் விடுதிக்கு வந்த தமி ழன் என்ற தமிழ்ச்செல்வன் ,அவரது சகோதரர் குபேந்தி ரன், மகன்கள் குணசேகரன் ,சந்திரசேகரன் ,ஓ.ராஜா அனுப்பி வைத்ததாக கூறப் படுகிற முத்துப்பாண்டி ஆகி யோர் விடுதியில் உள்ள பணி யாளர்களை மிரட்டி வெளி யேற்றி விட்டு ஹோம் ஸ்டே தங்கும் விடுதிக்கு பூட்டு போட்டுசென்றுள்ளனர். இதுதொடர்பாக அய்யப்பன் மேகமலை ஹோம் ஸ்டே உரிமையாளர் அய்யப்பன், சமையலர் எம்.வீரமணி ஆகி யோர் புகார் தெரிவித்துள்ள னர். எனினும் காவல்துறை இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார் உரிமையாளர் அய்யப்பன்.

அய்யப்பன் கூறுகை யில், “மண்ணூத்தை சேர்ந்த தமிழன் என்ற தமிழ்ச்செல் வன் மகன் தனசேகரன் என்ப வரிடம் 2 ஏக்கர் கிரையம் பெற்று மற்ற பங்குதாரர்கள் சம்மதத்தின் பேரில் எனது பங்கு நிலமான 50 சென்ட் நிலத்தில் பல லட்சம் கடன் வாங்கி கட்டிடம் கட்டி தங் கும் விடுதி நடத்தி வந்தேன் . இதற்கு தமிழன் மற்றும் அவர் குடும்பத்தினர் விடு திக்கு பல்வேறு இடையூறு கள் செய்து வந்தனர் .காவல் துறையிடம் முறையாக புகார் தெரிவித்து நடவ டிக்கை எடுத்தேன் .விடுதி யை அபகரிக்கும் நோக்கில் விடுதியில் உள்ள கட்டில், மெத்தைகளை எடுத்து செல் வது,குரங்குகளை விடுதிக்கு அனுப்பி பொருட்களை சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா எனது விடுதி மேனேஜர் விசு வநாதன் என்பவரை அழை த்து, இனிமேல் விடுதிக்கு செல்லக் கூடாது என்றும் கட் டப்பஞ்சாயத்து பேசி விடுதி யை யாரும் நடத்த வேண் டாம், சாவியை கொண்டு வாருங்கள் என்றும் சொல்லி யுள்ளார். அதனைத் தொட ர்ந்து தமிழன் மகன் குபேந்தி ரன் கட்டி வரும் கட்டிடத்தை இடித்ததாக கூறி மேனேஜர் விசுவநாதனை ,விசார ணைக்கு அழைத்து சென்ற ஹைவேவிஸில் காவல் துறையினரும், பின்னர் டிஎஸ்பி கூப்பிடுவதாக கூறி சின்ன மனூர் காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அங்கு ஓ. ராஜாவின் ஆள் முத்துப் பாண்டி வந்துள்ளார். அப் போது ‘அண்ணனிடம்’ சாவி யை கொடுப்பதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக அவரை திட்டியுள்ளார். பின்னர் முத் துபாண்டியுடன் செல்லுமாறு காவல்துறையினர் கூறி யுள்ளனர். பின்னர் விசுவ நாதனை அழைத்துக் கொண்டு மேகமலையில் உள்ள எனது தங்கும்விடுதி யை பூட்டியுள்ளனர். மேலும் தங்கும் விடுதி சார்பில் வைக் கப்பட்ட விளம்பர பலகை யையும் கிழித்து விட்டனர். இதற்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்கி யுள்ளனர்.

மேலும் தமிழன் மக னுக்கு சொந்தமானதாக கூறப்படும் மேற்படி நிலம் காரைக்குடி அருகில் உள்ள அரண்மனை சிறுவயல் கிரா மத்தை சேர்ந்த கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. போலியான ஆவணம் தயா ரித்து தானம் பத்திரம் மூலம் மோசடி செய்துள்ளனர். மேலும் இதே நிலத்தை காட்டி வருசநாடு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், ஸ்ரீராம் பைனான்ஸ், மதுரை மாவட்ட பால் உற்பத்தியா ளர் கூட்டுறவு சங்கம் ஆகிய வற்றில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர். மேலும் எனக்கு சொந்தமான நில த்தை வருவாய்த்துறை மூலம் என் அனுமதி இல்லா மல் உட்பிரிவு செய்துள்ளார். இதுகுறித்து புகார் தெரி வித்தும் அரசும் காவல்துறை யும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.