சென்னை,மார்ச் 17- தமிழகத்தில் கொரோனா தொடர்பாக 1 லட்சத்து 80 ஆயி ரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிக ரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை 125 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரி ழந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் எதிர் கட்சிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம் அளிக்கையில், “தமிழ்நாட்டில் யாருக் கும் கொரோனா பாதிப்பு இல்லை. சென்னை, தேனி, நெல்லை, திருச்சி உள்ளிட்ட 5 இடங்களில் கொரோனா பரி சோதனைக்காக ஆய்வுக்கூடம் உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு 500 மாதிரிகளை ஆய்வு செய்ய முடியும். இதில் தனியாரையும் ஈடுபட்ட மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். தற்போது கட்டணம் இல்லாமல் ஆய்வு நடத்தப்படுகிறது. யார் விரும்பினாலும் தானாக சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்” என்றார்.
தற்போது 25 லட்சம் முகக் கவசங்கள், மருந்து, மாத் திரைகள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். முக கவசங் களை அதிக விலைக்கு விற்கக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறோம். இதுவரை விமானத்தில் வந்த 1 லட்சத்து 80 ஆயிரத்து 62 பேரிடம் சோதனை நடந்துள்ளது. இதில் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்த 2,221 பேர் கண்காணிப்பில் உள்ளனர். தொடர்ந்து 14 நாட்கள் எப்படியிருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி வருகிறோம்” என்றும் அமைச்சர் கூறினார். அண்டை மாநில எல்லைகளில் சோதனைச் சாவடி அமைத்து காவல்துறை உதவியுடன் ஒவ்வொரு வாக னத்தையும் முழுமையாக பரிசோதனை செய்தபிறகு அனு மதித்து வருகிறோம். நாள் ஒன்று வெளி மாநிலங்களில் இருந்து 49 ரயில்களில் வருவோரையும் கண்காணித்து வருகிறோம். மக்கள் அதிகம் வரும் இடங்கள் அனைத்தும் சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அரசின் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற் கும் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரி வித்தார்.