tamilnadu

img

திறக்கப்படாத கூட்டுறவு உணவகம்: கவனிப்பாரா தமிழக முதல்வர்? தலைமைச் செயலகத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்....

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு சென்னை தலைமைச் செயலகமும் தப்பவில்லை. முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால் தலைமைச் செயலக வளாகத்தில் இயங்கி வந்த கூட்டுறவு மற்றும் தனியார் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டன. இதனால் கூட்டுறவு பணியாளர் அருந்தகம் முழுமையாக மூடப்பட்டது. 

50 நாட்களுக்கு பிறகு மே 15 ஆம் தேதி கூட்டுறவு உணவகம் செயல்பட அனுமதித்தது மாநில அரசு. ஆனால் உணவகத்தைத் திறக்க கூடாது; டீ, காபி ஆகியவை டம்ளரில் வழங்கக் கூடாது; அனைத்தும் பார்சலில் தான் வழங்க வேண்டும்; விற்பனை செய்யும் இடங்களில் தனிமனித இடைவெளி கடைப் பிடிக்கவேண்டும் என்றும் கட்டுப்பாடு களை விதித்தது.பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடக்கி வைத்த நிலையில், அரசின் உத்தரவை மதித்துகூட்டுறவு உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பல்வேறுசிரமங்கள் இன்னல்களுக் கிடையே  வெளியூர்களில் இருந்தும் (காஞ்சிபுரம், செய்யாறு, அரக்கோணம், வேலூர்) பணிக்கு வந்த ஊழியர்களுக்கு ஏப்ரல்,  மே மாத சம்பளம் ஜூன் மாதம் வரைக்கும் வழங்கப்படவில்லை.இதுகுறித்து பணியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி.டி. புருஷோத்தமனிடம் பலமுறை முறையிட்டும் கைவிரித்துவிட்டார். சங்க இயக்குனர்களி டம் குறைகளை கொட்டியும் சம் பளத்திற்கு வழி பிறக்கவில்லை.குடும்பங்கள் வறுமையில் வாடியதால் வேறு வழியின்றி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கவனத்திற்கு கொண்டு சென்றனர். அமைச்சரின் அறிவுறுத்தலை தொடர்ந்து தற்போது தான் இரண்டு மாதச் சம்பளம் கிடைத்துள்ளது.ஆங்காங்கே வானமே கூரையாய் காட்சியளிக்கும் இந்த கூட்டுறவு அருந்தகம் இந்த ஊரடங்கு காலத்திலும் சீரமைக்கப்படாமல் இன்னமும் முழுமையாக செயல்பட துவங்கவில்லை. இதன் விளைவு, கேன்டீன் ஊழியர்களுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களுக்கான  சம்பளம் எப்போது கிடைக்கும் என்பது கேள்விக் குறியாய் நிற்கிறது.

வெந்த புண்ணில்...
குறைந்தது 10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரைக்கும் பணி அனுபவம் கொண்ட தலைமைச் செயலக பணியாளர் கூட்டுறவு அருந்தகத்தில் பணியாற்றும் 20 ஊழியர்களின் குடும்பங்கள் மிகவும் ஏழ்மையானவை. இந்த கூட்டுறவு அருந்தகத்திலிருந்து கிடைக்கும் வருவாய் குறைந்தது 10,000, அதிகபட்சம் 15 ஆயிரத்தை நம்பியே உள்ளது. மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தற்போது வேலை தரப்படுகிறது. அந்த நாட்கள் மட்டுமே சம்பளத்திற்கு கணக்கிடப்படுகிறது. வேலை நாட்களை குறைத்தும் கூட கடந்த ஐந்து மாத காலமாகசம்பளம் கைக்கு வந்த பாடில்லை. இதனால் சாப்பாட்டுக்கே வழியின்றி அல்லாடி வருகின்றனர்.இந்நிலையில், கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடனைதிருப்பி செலுத்த முடியாமல் பரிதவிக்கின் றனர். அவர்களிடம் தவணைத் தொகை, வட்டி, அபராத வட்டியை உடனடியாக கட்ட வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிவரும் என்று நிர்ப்பந்திப்பது கொடுமையிலும் கொடுமையாகும். “கூட்டுறவு கேன்டீனை முழுமையாக திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்தால் தனிமனித இடைவெளியுடன் மீண்டும் உணவகம் செயல்படத் துவங்கும்.இதனால் எங்களுக்கு முழுமையாக வேலை கிடைக்கும். சம்பளமும் தரமுடியும். கூட்டுறவு சங்கத்திற்கு லாபம் கிடைக்கும். அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் பசியாற வழிவகை கிடைக்கும்” என்கின்றனர் கூட்டுறவு அருந்தகம் ஊழியர்கள்.தலைமைச் செயலக வளாகத்தில் இயங்கி வந்த தனியார் ஓட்டல்களான தர்பார், மாயாண்டி போன்றவை நிரந்தரமாக மூடப்பட்டாலும் ஓட்டல் பாரத், வெல்கம், சாப்பிட வாங்கஆகிய ஓட்டல்கள் முழுமை யாக திறக்கப்பட்டு அமர்ந்து சாப்பிடவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

ஆனால், நட்டத்தில் இயங்குவதாக கூறப்படும் தலைமைச் செயலக பணியாளர் கூட்டுறவுஅருந்தகத்தில் இன்னமும் பார்சல் மட்டுமே வழங்கப்படுவதன் மர்மம் விலகுமா என்று தலைமைச் செயலக ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.மாநிலம் முழுக்க பல்வேறு நிலையில் தளர்வுகள் அளித்துள்ள முதல்வர் தலைமைச் செயலக பணியாளர் கூட்டுறவு உணவகம் முழுமையாக செயல்படவும் ஊழியர்களுக்கு 5 மாத நிலவைத் தொகையுடன் மாதாமாதம் தாமதமின்றி சம்பளம் கிடைப்பதற்கும் வழி வகை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

===சி. ஸ்ரீராமுலு===