இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நடைன் டோரிஸ், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக சீனா, இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோரின் எண்ணிக்கை 4,295 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,19,179 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நடைன் டோரிஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே நாடின் டோரிஸ், தற்போது அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது. சமீபத்தில் அவர் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்திருப்பதால், அவர்களுக்கும் நோய்த்தொற்று பரவியிருக்குமோ என்னும் அச்சம் எழுந்துள்ளது.