லண்டனில், கண்டெய்னர் லாரி ஒன்றில் இருந்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட 39 பேரின் சடலங்களை போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.
லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட 39 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட லாரி, பல்கேரியாவில் இருந்து வேல்ஸ் வழியாக கடந்த சனிக்கிழமையன்று லண்டன் நுழைந்துள்ளதாகவும், இந்த கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த 25 வயதான வடக்கு ஐயர்லாந்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.