tamilnadu

img

ஆப்பிரிக்கா: தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்ததில் 30 பேர் பலி

ஆப்பிரிக்காவில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்ததில் 30 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்ததை ஏற்படுத்தி உள்ளது. 
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாத் நாட்டின் மத்திய பகுதியில் லிபியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ளது டிபெஸ்டி பிராந்தியம். இங்கு தங்கம் மிகுதியாக கிடைப்பதால் பல்வேறு குழுக்கள் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து தங்கத்தை எடுத்து வெளிச்சந்தைகளில் விற்றுவருகின்றனர்.
இந்த நிலையில், அங்குள்ள கொவ்ரி பவ்டி நகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கத்தை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சென்ற மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 30 பேர் பலியாகினர்.  இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதனால்  பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.