tamilnadu

மரக்கன்றுகள் நடும் விழா

 அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் லயன் சங்கம் தமிழ்நாடு பத்திரிகை யாளர் நலச்சங்கம் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேசன் சார்பில் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதான வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் ஆர் கே. செல்வமணி மரக்கன்றுகளை நட்டு வாழ்த்திப் பேசினார்.  நிகழ்ச்சிக்கு பரப்ரம்மம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முத்துக்குமரன், இயற்கை விவசாய ஆர்வலர் செல்வமணி, ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி அரிமா சங்க தலைவர் பாண்டியன், செயலர் ராஜா, பொருளாளர் சரவணன், மாவட்ட தலை வர்கள் பி ஜி ஆர் நகை மாளிகை உரிமையாளர் ரமேஷ்குமார், அருணா செல்வராஜ், சக்தி ரவிச் சந்திரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மேலும் 30 ஆயிரம் மரக்கன்றுகளை நட உள்ளதாக தெரிவித்தனர்.

;