அரியலூர், ஜூன் 15- அரியலூர் அரசு போக்குவரத்து பணி மனை முன்பு போக்குவரத்து தொழிற்சங் கங்கள் சார்பாக சிஐடியு மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் எம்.சந்தானம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு ஏ.ஜெகநாதன், எம்.முருகன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் எம்.கனகராஜ், எம்.கம்பர், ஐஎன்டியுசி சார்பில் ராஜா, ஹச்எம்எஸ் ஆர்.கொளஞ்சிநாதன், அறிவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கத்தினரும், போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜ்குமாரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதியில் போக்குவரத்து பணிமனை முன்பு 18 அம்சக் கோரிக்கை யை வலியுறுத்தி தொமுச மத்திய சங்கத் தலைவர் ஏ.அடைக்கலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு பொ றுப்பாளர் பாலமுருகன், ஏ.ஏ.எல்.எல்.எப் பொறுப்பாளர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிறகு கோரிக்கை களை மனுவாக கிளை மேலாளர் வழியாக போக்குவரத்து முதன்மைச் செயலாளர், கும்ப கோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர், புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொதுமேலாளரிடம் திங்களன்று கொடுத்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: போக்குவரத்து கழக பணியில் ஈடுபடும் போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை, சிகிச்சை காலத்திற்கான சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. எல்பிஎப் பொ துச்செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். சிஐடியு போக்குவரத்து சங்க பொ துச்செயலாளர் கருணாநிதி, தலைவர் சீனிவா சன், அசோகன், முருகன், எல்பிஎப், ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், எம்எல்எப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.